ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு

  

மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மீகம் என்னும் பயிரை வளர்க்க வேண்டுமானால் தியானம்,

மௌனம், தொண்டு, தருமம் போன்ற முறைகளால் வளர்க்க வேண்டும்.

 

 

   

  
  

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: 

 

தொண்டு நெறி:     

   

அருளும் - பொருளும்:

"  என்னிடம் அருளை வேண்டி வருகிறவர்கள் பலருக்கு நான் அருளோடு பொருளும் கொடுக்கிறேன். பத்துப் பேர் முதலாளியாகவும் மாறுகிறீர்கள். உடனே கர்வமும் வந்து விடுகிறது. பொருள் வந்ததும் அருள் நழுவிக் கொள்கிறது."

  
     

இன்றைய உலகின் நிலை:

   

உலக நியதி:

"கொடுத்தது கிடைக்காது. நினைப்பது நடக்காது என்பது தான் இந்த உலக நியதி. இதைப் புரிந்து கொண்டு ஆன்மா உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளை உள்ளம் வேண்டும். கள்ள உள்ளம் கூடாது."